இது முன்னைய செய்தி
மண்டைதீவில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயம்
மண்கும்பானில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்
இவை இரண்டுக்கும் நடுவில் அல்லைப்பிட்டியில் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆலயமாகவும்-எம்முன்னோர்களினால் பய பக்தி்யோடு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆலயமாக சிறப்புடன் விளங்கியதுமான ஆலயம் தான் சிந்தாமணிப்பிள்ளையார் (சருகுப்பிள்ளையார்)ஆலயம் ஆகும்
இந்த ஆலயத்திற்கு அருகில் குடுப்பத்துடன் நீண்டகாலமாக வசித்து வந்ததுடன் – அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த ஏனைய இந்து ஆலயங்களின் பூசகராகவும் பணிபுரிந்தவர் தான் அமரர் நடேஸ்வரக் குருக்கள் ஆவார்.
அல்லைப்பிட்டியில் பெரும் சிறப்போடும் புகழோடும் ஒரு காலத்தில் விளங்கிய -சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையோ கண் கலங்க வைக்கின்றது.
ஆலயத்திற்குள் இருந்த விக்கிரகங்கள்-சிலைகள் அனைத்தும் களவாடப்பட்ட நிலையில்- ஆலயம் வெறுமையாகக் காணப்படுவதோடு-கால்நடைகளின் கூடாரமாகவும்-சமூக விரோதிகளின் மறைவிடமாகவும் மாறியிருப்பதாக -இவ்வாலயத்தோடு தொடர்பு பட்ட பலர் கவலையோடு எமது இணையத்திற்கு முன்னர் தெரிவித்தனர்.
அன்பான புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களே!
எம்முன்னோர்களினால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட-அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் இன்றைய நிலையினை சுருக்கமாக மேலே பதிவு செய்துள்ளோம்.மீண்டும் இந்த ஆலயத்தினுள் விநாயகர் விக்கிரகம் வைத்து கும்பாபிஷேகம் செய்து ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
மிகமிகப் பழமையான சிந்தாமணிப் பிள்ளையாரை-அழியவிடாமல் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும்-புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களையே சார்ந்துள்ளது .
அல்லையூர் இணையத்தின் விடாமுயற்சியின் பலன்
அல்லையூர் இணையம் தொடர்ந்து மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக-இதுவரை 3 லட்சம் ரூபாக்கள் வரை வழங்குவதற்கு புலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்கள் முன் வந்துள்ளனர்.அவர்களிடமிருந்து முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாக்கள் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது கட்டமாக ஒரு இலட்சமும்-மூன்றாவது கட்டமாக ஒரு இலட்சமும் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.இதன் விபரங்கள் பற்றுச்சீட்டுக்கள் பின்னர் இணைக்கப்படும்.
புதிய சிலை
சிந்தாமணிப்பிள்ளையாருக்கான புதிய சிலை செய்து எடுத்துவரப்பட்டு-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆலய புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து-கும்பாபிஷேகத்தின் போது சிலை எடுத்துச் செல்லப்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
புனரமைப்பு பணிகளின் தற்போதய நிலை
மடப்பள்ளிக்கு கதவு-யன்னல் போடப்பட்டுள்ளது
ஆலயத்திற்கு வெளியே இரும்புக்கதவு பொருத்தப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
ஆலய புனரமைப்புக்கும்-அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கும்-நிதி தேவைப்படுவதனால் புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி சிந்தாமணிபிள்ளையாரின் பக்தர்கள் நிதி தந்து உதவிட முன்வருமாறு அல்லையூர் இணையத்தின் ஊடாக-ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.