அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் (இளைப்பாறிய விவசாய போதனாசிரியர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கூட்டுறவுச் சங்கத் தலைவர்- வட்டுக்கோட்டை, முன்னாள் வடமாகாண உலக உணவு வங்கி ஒருங்கிணைப்பாளர்- FORUT)அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னாரின்31ஆம் நாள் நினைவுதினத்தினை (14-12-2014 )முன்னிட்டு -மட்டக்களப்பு கல்வயலில் அமைந்துள்ள-அம்மன் மகளிர் ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லத்தில் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளளோம்.