கடந்த வருடம் தீவகத்தில் நெல் அறுவடையில் முன்னிலை வகித்த அனலைதீவு விவசாயிகள்-இம்முறையும் ஆர்வத்துடன் நெல் விதைப்பில் ஈடுபட்டிருப்பனை நிழற்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அனலைதீவைத் தவிர தீவகத்தின் ஏனைய கிராமங்களில் இம்முறையும் நெற்செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லைப்பிட்டியிலும் இம்முறை விவசாயிகள் எவருமே நெல்விதைப்பில் ஈடுபடவில்லை என்று ஊரிலிருந்து விவசாயி ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
அதே நேரம் பனம்பாத்திகளை அமைப்பதில் அல்லைப்பிட்டி மக்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி-அனலைதீவு அறநெறி