யாழ்.மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத் தலங்களில் ஒன்றான வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்தத் திருவிழா கடந்த 11 -09-2014 வியாழக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 20-09-2014 சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சிந்தாத்திரை மாதாவின் திருச்சுரூப பவனியும் இடம் பெற்றது.
அன்னையின் அருளாசி வேண்டி தீவகம்-யாழ்குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகமெல்லாம் பரந்து வாழும் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் பக்தர்கள் பெருநாள் திருவிழாவினை பார்வையிட வேண்டும் என்ற நோக்கோடு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அபிராமி வீடியோ பதிவாளர்களினால் பதிவு செய்யப்பட்ட தெளிவான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
நீங்கள் பார்வையிடப்போகும் வீடியோவிற்கான நிதி அனுசரணையினை வழங்கியவர்கள்
பாரிஸ் மாநகரில் லாச்சப்பல் பகுதியில் நீண்ட காலமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நன்மதிப்பையும்-அன்பையும் பெற்று வியாபாரத்தில் சிறப்புற்று விளங்கும் ஸ்ரீமகால் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர்களே இந்நிதிி அனுசரணையினை வழங்கியுள்ளார்கள்.அன்னையின் அருளும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு கிடைக்க நாமும் வேண்டுகின்றோம்.