அல்லைப்பிட்டி அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு பகல் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று- அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி தெய்வயானையுடன் வீதியுலா வரும் திருக்காட்சியும் இடம் பெறுவதுடன் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்பது தினங்களும் தனிப்பட்ட உபயகாரர்களின் அனுசரணையில் திருவிழாக்கள் நடைபெற்றதுடன் பத்தாம் நாள் திருவிழா பொதுமக்களின் அனுசரணையில் 16-09-2014 செவ்வாய்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பகலும் இரவும் நடைபெற்ற-திருவிழாக்களை முடிந்தவரை பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.