யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவத் திருவிழா-31-07-2014 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 09-08-2014 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும்-உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து அம்மனின் ஆலயத்திற்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துமாரி அம்மன் தேரேறி பவனிவந்த கண்கொள்ளாக்காட்சிதனைக் கண்டு கழித்தார்கள் என்று வேலணையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!