இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா-25-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு மாவிட்டபுரம் கந்தன் தேரேறி பவனி வந்த கண்கொள்ளாக்காட்சியினைக் கண்டு கழித்தனர்.அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப்பட்ட நிழற்படங்களையும்-வீடியோவின் குறுகிய பதிவினையும் எமது வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.
