அதற்கு முன் இதை ஒரு முறை படியுங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பளுகாமம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் 90 மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர். பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகளே இங்கு வசித்து வருகின்றனர். இவர்களிடமிருந்து அல்லையூர் இணையத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோளே கீழே இணைக்கப்பட்டிருக்கின்றது.
உங்களில் யாராவது உள்ளம் உருகி உதவிட விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகளுக்கு -0033651071652
கருணை கொண்ட உள்ளம்-அவர்
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்-அவர்
கடவுளைத் தேடி அலைகின்றார்.
அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவினை முன்னிட்டு-ஆலயத்தின் புனரமைப்புக்கு உதவிடும் முகமாக-அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன் திரு பொன்னத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களினால் பிரான்சில் திரட்டப்பட்ட நிதியினை (120000.00 ரூபாக்களை)ஆலயத்தின் பாதுகாவலரும் பராமரிப்பாளருமாகிய, பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம் நேரடியாகச் சென்று பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் ஒப்படைத்திருந்தார்கள்.
நிதி வழங்கியோர் விபரங்கள்
01-திரு சுப்பிரமணியம் இராசலிங்கம்( SR-பிரான்ஸ்)-250 ஈரோக்கள்
02-திரு ஏரம்பு வேலும்மயிலும்-(பிரான்ஸ்)-100-ஈரோக்கள்
03-திரு திருமதி ராசாத்தி குமார்-(பிரான்ஸ்-ஏழாலை வடக்கு)-100-ஈரோக்கள்
04-துலசிகா ஸ்ரனி்லாஸ்-(பிரான்ஸ்) 100-ஈரோக்கள்
05-திரு கதிர்காமு மோகனசுந்தரம்-(பிரான்ஸ்)-50 ஈரோக்கள்
06-திரு குமார் தனேஸ்-(பிரான்ஸ்)-50 ஈரோ்கள்
07-திரு அலெக்சாண்டர் அன்ரன் (பிரான்ஸ்)-50 ஈரோக்கள்
மொத்தம்-700 ஈரோக்கள்
இலங்கை ரூபாவில் 120000.00 ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ஆகும்-இப்பணத்தினை அனுப்புவதற்கான செலவினை அல்லையூர் இணையம் பொறுப்பேற்றுக் கொண்டது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் ஆலய புனரமைப்புக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் அன்னையின் ஆசீர்வதிப்புடன்-எமது நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.