அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் மூன்றுமுடி அம்மனின் ஆனி உத்தரத்திருவிழா 04-07-2014 வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் ஆனி உத்தரத் திருவிழாவில் பக்தியோடு கலந்து கொண்டதாகவும்-கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அதிகளவான மக்கள் கலந்து கொண்டது பெரும் சந்தோசத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
ஆனி உத்தரத்திருவிழாவின் உபயகாரர்-திரு திருமதி தெய்வேந்திரா ஜெயராணி பிரித்தானியா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.